2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப் படுத்துதல் - (கட்டம் 4) - கிராமிய சமூகங்கள் மற்றும் சமூக - பொருளாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கிடையில் சிறந்த இணைப்பொன்றை வழங்கும் குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டுவரும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் நான்காவது கட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக 168 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் தொகையொன்று செலவழிக்கப்படும். இத்தொகையில், 150 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் தொகையொன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒழுங்குமுறையான சாதாரண மூலதன வளங்கள் நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, உரிய கடன் உதவி தொடர்பில் இணக்கப்பேச்சுக்களை நடாத்தி கடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கென நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு அதிகாரமளிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |