• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கால்நடைவளர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ள மிருகவைத்திய சத்திர சிகிச்சையாளர்களுக்கு நவீன பால்சார் பண்ணை நடைமுறைகள் தொடர்பில் பயிற்சியினை வழங்குதல்
- கடந்த வருடங்களின் போது, உள்நாட்டு பால்சார் பண்ணைத் தொழிலானது குறிப்பிடத்தக்க முன்னேற்ற மொன்றை அடைந்துள்ளது அத்துடன், இதனுடன் சேர்த்து, இத்துறையில் பயிற்சிபெற்ற நிபுணத்துவ அறிவிற்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. ஆதலால், இந்நாட்டில் கால்நடைவளர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ள மிருகவைத்திய சத்திர சிகிச்சையாளர்களுக்குத் தேவையான நவீன பால்சார் பண்ணை நடைமுறைகள் மற்றும் தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி முறைகள் தொடர்பில் விசேட பயிற்சியினை வழங்குவதற்கு பிரேரிக்கப் பட்டுள்ளது. அதற்கிணங்க, பெலாருஸ் அரச கமநல தொழினுட்ப பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில், கூறப்பட்ட பல்கலைக்கழகத்தில், பால்சார் விஸ்தரிப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள 10 மிருகவைத்திய சத்திர சிகிச்சையாளர்களுக்கு பயிற்சியினை வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.