• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுகேகொடை மிரிஹானையில் உத்தேச பொலிஸ் வீரர்களுக்கான வீடுகள் மற்றும் உணவுச்சாலை கட்டடத்தை நிருமாணித்தல்
- நுகேகொடை மிரிஹானையில் உத்தேச பொலிஸ் வீரர்களுக்கான வீடுகள் மற்றும் உணவுச்சாலை சார்பில் நிருமாணிக்கப்படுவதற்கு பிரேரிக்கப்பட்ட ஆறு மாடி கட்டடத்தின் மூன்றாம் மாடி வரையான ஆரம்ப நிருமாண வேலை 2008 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தின் எஞ்சிய நிருமாண வேலையினை பூர்த்தி செய்வதற்கென பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்கிணங்க இந்த ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப் பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 340.6 மில்லியன் ரூபா தொகையொன்றுக்கு ஆகக்குறைந்த மிக ஏற்புடையதான விலைமனுதாரரான M/s.Sripalie Contractors (Pvt) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.