2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெருந்தோட்ட மக்களின் நலநோம்பல் வசதி ஏற்பாட்டிற்காக பிரதேசசபை சட்டத்தை திருத்துதல் - பெருந்தோட்ட சமூகத்திற்கு அவசியமான பொது பொழுதுபோக்கு வசதிகளை வழங்குவதற்காக பிரதேச சபை நிதியங்களைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் உரிய ஏற்பாடுகள் மீது திருத்தங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரம் ஏற்கனவே அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வரைவு சட்டமூலம் (திருத்தம்) தொடர்பில் மாகாண சபைகளின் கருத்துகளை கோருவதற்கென, அதற்கிணங்க தயாரிக்கப்பட்ட கூறப்பட்ட வரைவு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டும் அதன் பின்னர் அதனை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |