• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கல்விக் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரியர் பயிலுநர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த உணவு படியை அதிகரித்தல்
- பாடசாலைக்கு தேவைப்படும் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நோக்கத்திற்காக நாட்டில் 19 தேசிய கல்விக் கல்லூரிகள் காணப்படுவதுடன் தற்போது 12,558 வதிவிட ஆசரியர் பயிலுநர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களின் வதிவிட பயிற்சி காலப்பகுதியில் இவ் ஆசிரிய பயிலுநர்களுக்கு 3,500/- ரூபா மாதாந்த படியொன்று செலுத்தப்பட்டு வருவதுடன், தற்கால போக்குகளை பூர்த்தி செய்யும் பொருட்டு கூறப்பட்ட படியை அதிகரிப்பது பொருத்தமுடைய தாகவிருக்கும். அதற்கிணங்க, 5,000/- வரை மாதாந்த படியை அதிகரிக்கும் பொருட்டும் அனுபவப் பயிற்சி அடங்கலாக 03 வருட முழு பயிற்சி காலத்திற்கும் இப்படியை வழங்கும் பொருட்டும் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.