• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை (விசேட ஏற்பாடுகள்) சட்டக் கோவை சட்டத்திற்கான திருத்தங்கள் - (தடுப்புக் காவலிலுள்ள ஆட்களின் உரிமைகள் - சட்ட மதியுரைஞர் ஒருவரை அணுகுதல்)
- சட்ட மதியுரைஞர் ஒருவரின் சேவைகளை அடைந்துகொள்வதற்கு கட்டுக்காவலிலுள்ள ஆளொருவரின் உரிமையை உறுதிப்படுத்தும் பொருட்டு 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைசட்டக் கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினைத் திருத்துவதற்கென சமர்ப்பிக்கப் பட்ட வரைவு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதனை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் முன்னர் வழங்கப்பட்டது. மேலும், வரைவு சட்டமூலம் தொடர்பில் பிரேரிக்கப்பட்ட திருத்தங்களை பாராளுமன்றத்தில் குழுநிலைச் சந்தர்ப்பத்தில் சமர்ப்பிப்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
,br> திருத்தப்பட்ட சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மீளச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்துடனும் இலங்கை பொலிசுடனும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனும் உரிய அக்கறைதாரர்களுடனும் தொடர் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டிருந்ததுடன், திருத்தப்பட்ட வரை சட்டமூலம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கூறப்பட்ட திருத்தப்பட்ட வரைவு சட்டமூலத்தை, நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஆரம்பத்தில் நான்கு (04) ஆண்டுகளுக்கு செயல்வலுவிலிருக்கும் வண்ணம், அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டு அதன் பின்னர் அதனை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.