2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முறையான கமத்தொழில் காப்புறுதித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் - இயற்கை அனர்த்தங்களின் காரணமாக விவசாயப் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மீட்டெடுப்பதில் விவசாய சமூகம் எதிர்கொள்ளும் சிரமங்களை கவனத்திற் கொண்டு, ஆரம்பத்தில் நெல், சோளம், சோயா, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் ஆகிய 06 பயிர்களுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 40,000/- ரூபா கொண்ட காப்புறுதி காப்பீடு ஒன்றை வழங்குவதற்கான வழிமுறையொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2017 ஆம் வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிப்பொன்று செய்யப்பட்டது. அதற்கிணங்க, கூறப்பட்ட காப்புறுதி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கென தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்துடன் இணைந்து பொருத்தமான பெறிமுறையொன்றை முன்வைக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |