• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெங்குத் துறையின் செயற்றிறனுக்காக 2018 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள புதிய கருத்திட்டங்கள்
- இலங்கையில் கிட்டத்தட்ட 70% ஆன தெங்கு விளைச்சலானது உள்நாட்டு நுகர்வுக்கு பயன்படுத்தப்படுவதுடன் எஞ்சியவை தெங்கு தொடர்புபட்ட கைத்தொழில்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. தேங்காய் உள்ளீடு தொடர்புபட்ட உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் 84 பில்லியன் ரூபா கொண்ட ஏற்றுமதி வருமானமொன்றை பெற்றுக் கொள்வதில் இலங்கை வெற்றி கண்டுள்ளது. தெங்கு பயிர்ச்செய்கைக்கு கிடைக்கக்கூடியதான வரையறுக்கப்பட்ட காணி விஸ்தீரணம் மற்றும் வேறுபட்ட காலநிலை காரணிகள் காரணமான சவால்கள் காரணமாக, தெங்கு தொடர்புபட்ட கைத்தொழில்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டியுள்ளதுடன் உள்நாட்டு நுகர்வோரையும் அதேபோன்று தெங்கு பயிர்ச்செய்கையாளர்களையும் பாதுகாக்க வேண்டியுமுள்ளது. அதற்கிணங்க, தெங்கு விளைச்சலையும் தெங்குத் துறையில் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும் குறிக்கோளுடன், விசேடமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில், தெங்கு விளைச்சலின் செயற்றினை அதிகரிப்பதற்கென மாதிரி தெங்கு தோட்டங்களைத் தாபிக்கும் பொருட்டும் 2018 ஆம் ஆண்டிலிருந்து தெங்குத் துறைக்கென பயிற்றப்பட்ட தொழிற்படையொன்றை உருவாக்கும் பொருட்டும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.