2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொள்ளுபிட்டியவில் இருந்து தெஹிவளை வரை பொழுதுபோக்கு சார்ந்த கடற்கரைப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் - கொழும்பு நகரத்தின் துரித அபிவிருத்தியுடன், கொழும்பு நகரத்திலும் புறநகர்களிலும் வாழும் மக்களிற்காக பொதுவான கடற்கரை பிரதேசமொன்றை அபிவிருத்தி செய்தல் அவசியமானதாக மாறியுள்ளது. ஆதலால், பொது பொழுதுபோக்கு செயற்பாடுகள் கருதி கொள்ளுபிட்டியவில் இருந்து தெஹிவளை வரை பொழுதுபோக்கு சார்ந்த கடற்கரையைப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டும் அதன்பின்னர் கடலரிப்பை தணிக்கும் பொருட்டும் மேலதிக புகையிரத இணைப்புக்களுக்குத் தேவையான இடவசதியை வழங்கும் பொருட்டும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |