• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இரத்தினபுரி கல்வி நிலையத்தை தாபிப்பதற்காக காணித் துண்டொன்றை வழங்குதல்
- 'ஒவ்வொரு மாகாணத்திற்கும் திறந்த பல்கலைக்கழகத்தின் ஒரு பிராந்திய நிலையம்' எனும் கருத்திட்டத்தின் கீழ் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இரத்தினபுரி கல்வி நிலையத்தை மேம்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, புதிய நகரத்தில் அமைந்துள்ள, நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 01 ஏக்கர் 02 றூட் விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றை இந்நோக்கம் கருதி இறையிலிக் கொடையொன்றாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு கைமாற்றும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.