2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை ஆயுள்வேத மருந்துப் பொருள் கூட்டுத்தாபனத்தின் அநுராதபுர பிராந்திய அலுவலகம், விற்பனை நிலையம் மற்றும் மருந்து கொள்வனவு நிலையம் என்பவற்றை ஒரே கட்டடத்தில் தாபித்தல் - அநுராதபுர நகரத்தில் வேறுபட்ட இடங்களில் அமைந்துள்ள இலங்கை ஆயுள்வேத மருந்துப் பொருள் கூட்டுத்தாபனத்தின் அநுராதபுர பிராந்திய அலுவலகம், விற்பனை நிலையம் மற்றும் மருந்து கொள்வனவு நிலையம் என்பவற்றை ஒரே வளாகத்தில் தாபிப்பதற்கான தேவைப்பாடானது இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல கம்பனிக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த, அநுராதபுரத்தில் பொது விளையாட்டு மாவத்தையில் அமைந்துள்ள அரசாங்க காணித் துண்டையும் கைவிடப்பட்டுள்ள கட்டடத்தையும், இலங்கை ஆயுள்வேத மருந்துப் பொருள் கூட்டுத்தாபனத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் உரித்தளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |