2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அணுஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்புடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல் - உயர் சக்தி இயற்பியல் மற்றும் தொடர்புபட்ட உயர் தொழினுட்ப விஞ்ஞான பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனமான அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்புடன் ஒத்துழைப்பு உடன்படிக்கை யொன்றை 2017 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.. இவ் உடன்படிக்கையானது நாட்டின் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் அத்துடன் விஞ்ஞானிகளுக்கும் இவ்வமைப்பின் ஆய்வுகூடங்களை அணுகிக்கொள்வதற்கும் இவ்வமைப்புடனும் மற்றும் இவ்வமைப்புடன் தொடர்புபட்ட கிட்டத்தட்ட 77 நாடுகளின் விஞ்ஞானிகளுடனும் தொடர்பு கொள்வதற்குமான சந்தர்ப்பமொன்றை வழங்குவதுடன் இலங்கை மாணாக்கர் தொகையினருக்கு கல்வி புகட்டுவதற்கும் அதே போல உள்நாட்டு கைத்தொழில்களின் முன்னேற்றத்திற்கும் இது ஏதுவாக அமையும். அதற்கிணங்க, இணைப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் பொருட்டும் கூறப்பட்ட உடன்படிக்கைகளுடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 05 ஆண்டுகளில் 250.45 மில்லியன் ரூபா கொண்ட ஏற்பாடு ஒன்றை ஒதுக்கும் பொருட்டும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |