• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கான குறுங்கால தீர்வுகள்
- ஒவ்வொரு புகையிரத கடவையிலும் முறைமை சார்ந்த பாதுகாப்பினை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். தற்போது, பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் மணி மற்றும் ஔி பாதுகாப்பு முறைமையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், அத்தகைய செயற்பாடுகள் நிறைவடையும் வரை, அத்தகைய கடவைகளில் சம்பவிக்கக்கூடிய விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு புகையிரத கடவைத்தடை இயக்குனர்களை ஈடுபடுத்துவது அவசியமானதாகும்.

தற்போது, இலங்கை பொலிசின் தலையீட்டுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கடவைத்தடை இயக்குனர்கள் மூலம் கையாளப்படும் 687 புகையிரத கடவைகள் நாடு பூராகவும் உள்ளன. அத்தகைய ஒவ்வொரு கடவைக்கும், மூன்று (03) கடவைத்தடை இயக்குனர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதுடன் அவ்வாறு பணிக்கமர்த்தப்பட்ட ஒவ்வொரு ஆளுக்கும் 7,500/- ரூபா கொண்ட மாதாந்த படியொன்று செலுத்தப்படுகின்றது. எவ்வாறாயினும், கிட்டிய கடந்த காலத்தில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான கடவைத்தடை இயக்குனர்கள் அவர்களுக்கு செலுத்தப்பட்ட படி போதாமை காரணமாக சேவையை விட்டு விலகியுள்ளனர்.

ஆதலால், தீர்வு நடவடிக்கையொன்றாக, பொறுப்பளிக்கப்படவுள்ள நாள் பூராகவும் கடவைத்தடைகளை கையாளும் பொறுப்பை, விசேடமாக இந்த நோக்கத்திற்கென தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளி குடும்பத்தின் தனித்த உறுப்பினர் ஒருவருக்கு, இப்பணி குறித்தொதுக்கப்பட்ட கூறப்பட்ட சமுர்த்தி பயனாளி குடும்பத்திற்கான ஒவ்வொரு கடவைத்தடைக்கும் 22,500/- ரூபா கொண்ட மாதாந்த கொடுப்பனவு கருதி, கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.