• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச எல்லைகடந்து புரியப்படும் பல்வேறுபட்ட குற்றங்களை தடுப்பது தொடர்பில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுதல்
- ஆட்கடத்தல் மற்றும் ஏனைய சருவதேச எல்லைகடந்த குற்றங்களை தடுப்பது தொடர்பில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையில் நடைமுறையிலுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்தி மேலும் முன்னேற்றும் நோக்குடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடும் பொருட்டு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது.. இதனூடாக, இரு தரப்புக்களும், ஆட்கடத்தல் மற்றும் சட்டரீதியற்ற பொருட்களின் பரிமாற்றம் ஆகியவற்றை தடுத்தல், சருவதேச எல்லை சார் முகாமைத்துவம், சருவதேச எல்லைகடந்த குற்றங்களைத் தடுத்தல் தொடர்புபட்ட பிராந்திய மற்றும் பல்தரப்பு ஈடுபாட்டை மேம்படுத்தல் மற்றும் ஆட்கடத்தலை விட அத்தகைய வேறு குற்றங்களையும் பண தூய்மைப்படுத்தல் மூலம் சருவதேச எல்லைகடந்த ஏனைய குற்றம் ஆகியவற்றைத் தடுத்தல் போன்ற நன்மைகளை பெற்றுக் கொள்ளும். அதற்கிணங்க, இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் குடிவரவு மற்றும் நாட்டெல்லை பாதுகாப்பு திணைக்களத்திற்கும் இடையில் பிரேரிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.