2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2018 நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் - 2018 நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் 2017 செப்ரெம்பர் மாத இறுதியில் பாராளுமன்றத்தில் அட்டவணைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைள் மற்றும் முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு 2018-2020 நடுத்தவணைக் கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்புக்கு ஏற்பாடு செய்யக்கூடிய மொத்த வளங்களின் அளவினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பொதுத் திறைசேரியினால் இந்த வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அமைச்சுக்களுடனும் மாகாண சபைகளுடனும் நடாத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட கலந்துரையாடல்களில் எழுந்த விடயங்களின்பால் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 2018 நிதி ஆண்டு சார்பில் அரசாங்கத்தின் மொத்த செலவு 3,982 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையிலிருந்து அரசாங்க கடன்களை மீளச் செலுத்துதல், விதவைகள், அநாதைகள் நிதியத்திற்கு பங்களிப்புத் தொகை போன்ற ஏற்கனவே பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சட்டங்களின் கீழ் உறப்படவுள்ள செலவு 2,005.1 பில்லியன் ரூபா ஆகையினால் இந்த செலவு தவிர மொத்த செலவில் 1,977 பில்லியன் ரூபாவைக் கொண்ட செலவினை ஏற்பதற்கு உத்தேச ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அதிகாரம் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இதில் 2018 ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் மீண்டுவரும் செலவு 1,308.9 பில்லியன் ரூபாவெனவும் மூலதன செலவு 668 ரூபாவெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 2018 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் அரசாங்க வருமானம் உட்பட வௌிநாட்டு கொடைகளின் மொத்தம் 2,175 பில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதோடு, இதற்கமைவாக அரசாங்கத்தின் முற்பண செலவுப் பணிகளுக்காக 6 பில்லியன் ரூபாவையும கவனத்திற்கு எடுத்துக் கொள்கையில் 1,813 பில்லியன் ரூபாவை உள்நாட்டு, வௌிநாட்டு தோற்றுவாய்களின் மூலம் கடனாக பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த வரைவு வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள் உள்ளடக்கப்பட்ட 2018 நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |