• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் அபிவிருத்திக்கான சருவதேச நிதியத்தின் உள்நாட்டு அலுவலகத்தை தாபித்தல்
- ஐக்கிய நாடுகளின் விசேட முகவர் நிறுவனமொன்றான கமத்தொழில் அபிவிருத்திக்கான சருவதேச நிதியம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் கிராமிய வறுமை நிலைமைகளை இல்லாதொழிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் நிறுவனமொன்றாகும். 1978 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பல்வேறு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்த அமைப்பு தற்போது பல்வேறுபட்ட கமத்தொழில் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்குத் தேவையான ஒத்தாசையினை வழங்குகின்றது.

இந்த நிதியத்தினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தும் சகல செயற்பாடுகளையும் பலப்படுத்துவதற்காக உள்நாட்டு அலுவலகமொன்று திறக்கப்படவுள்ளது இதற்கமைவாக, இந்த நிதியத்தின் உள்நாட்டு அலுவலகமொன்றை இலங்கையில் தாபிப்பது சம்பந்தமாக கமத்தொழில் அபிவிருத்திக்கான சருவதேச நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.