2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு கோட்டை CHARLMERS GRANARIES மனையிடத்தில் கலப்பு அபிவிருத்தி கருத்திட்டம் - சகல போக்குவரத்து மார்க்கங்களையும் இணைத்து பொழும்பு கோட்டை / புறக்கோட்டை பிரதேசத்தில் பல்மார்க்க போக்குவரத்து மத்திய நிலையமொன்றைத் தாபிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாகவுள்ள 'CHARLMERS GRANARIES' என்னும் ஏக்கர் 9 றூட் 3 பேர்ச்சர்ஸ் 27 விஸ்தீரணம் கொண்ட நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பல்மார்க்க போக்குவரத்து மத்திய நிலைய கருத்திட்டத்தின் கீழ் 'கொழும்பு நகர நுழைவு' என குறித்த காணித் துண்டை அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான முதலீட்டாளரை தெரிவு செய்வதற்கு போட்டி கேள்வி கோரும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |