2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு தாதியர் பாடசாலையில் ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணித்தல் - உயர் நோயாளர் கவனிப்பு சேவையொன்றை வழங்கும் போது தாதி உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிக அத்தியாவசியமானதாகும். விஞ்ஞான அறிவு மற்றும் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் தொடர்பிலான புரிந்துணர்வுடன் திறமை மிக்க பயிற்றப்பட்ட தாதி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தாதியர் பாடசாலைகளின் வசதிகளை அதிகரிப்பது தேவையானதென அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. 1939 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட கொழும்பு தாதியர் பாடசாலையானது நாட்டிலுள்ள பிரதான தாதியர் பாடசாலையொன்றாவதோடு, அதன் தற்போதைய வசதிகள் போதுமாக காணப்படுவது ஆண்டொன்றில் 100 தாதியர்களை பயிற்றுவிப்பதற்காக மாத்திரமாகும். ஆதலால், ஆண்டொன்றுக்கு சுமார் 600 தாதியர்களை பயிற்றுவிக்க கூடிய விதத்தில் கொழும்பு தாதியர் பயிற்சிப் பாடசாலையின் வசதிகளை விருத்தி செய்வதற்காக ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த கட்டடத்தின் நிருமாணிப்பு ஒப்பந்தத்தை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |