• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிருமாணிப்பு வெற்றிகரமாக பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக ஒப்பந்தகாரர்களின் காசோட்டத்தை மேம்படுத்துதல்
- உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கு அரசாங்கம் உயர் கவனம் செலுத்தியுள்ளது. இதன்போது தேவையான தரநிலையைப் பேணி உடன்பட்ட கால எல்லை உட்பட செலவிற்குள் உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டங்களை பூர்த்தி செய்வது அத்தியாவசியமானதாகும். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சில உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் பல்வேறுபட்ட காரணங்களினால் நிதியிடும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இது அவர்கள் பொறுப்பேற்ற வேலைகளை உரிய காலப்பகுதிக்குள் சிறந்த தரத்தில் பூர்த்தி செய்வதற்கு தடையாக உள்ளதென இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கு மாற்று வழியாக ஒப்பந்தக்காரர்களின் காசோட்டத்தை இலகுபடுத்துவதற்கு பொருத்தமான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.