• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொட்டாவ, குலசெவனவத்த தொழில் துறையினருக்கான நடுத்தர வகுப்பினருக்கான வீடமைப்புக் கருத்திட்டம்
- கொழும்பு நகரத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள 'நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின்' கீழ் கொட்டாவ, குலசெவனவத்த பிரதேசத்தில் தொழில் துறையினருக்கான நடுத்தர வகுப்பினருக்கான வீடமைப்புக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் 300 வீட்டு அலகுகள் நிருமாணிக்கப்படவுள்ளது. இதற்காக தகைமைபெற்ற ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளதோடு, நான்கு கேள்விதாரர்களினால் பிரேரிப்புகள் முனவைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரிப்புகளை மதிப்பிட்ட அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வடிவமைத்து, நிருமாணிக்கும் அடிப்படையில் உரிய ஒப்பந்தத்தை 3,699 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு Sathuta Builders (Pvt) Ltd நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.