• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் மருந்து உற்பத்தித் தொழிலை கட்டியெழுப்புவதற்காக அரசாங்க தனியார் கூட்டு தொழில்முயற்சிகளை தாபித்தல்
- இலங்கையில் மருந்து உற்பத்தித் தொழிலை கட்டியெழுப்புவதன் மூலம் மருந்து இறக்குமதிக்குச் செலவாகும் கணிசமான அந்நிய செலாவணியை சேமித்துக் கொள்வதற்கு இயலுமாவதோடு, மருந்துகளின் விலைகளை நிலையாகப் பேணுவதற்கும்கூட இதன்மூலம் வாய்ப்பு கிடைக்கும். இதற்கமைவாக வைத்தியசாலைகளுக்குத் தேவையான புதிய மற்றும் உயர் தரத்திலான மருந்து வகைகளை வினைத்திறனுடன் அரசாங்கவைத்தியசாலைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கும் சாத்தியம் உள்ள முதலீட்டாளர்களை இனங்கண்டு இந்த முதலீட்டாளர்களுக்கும் அரசாங்க மருந்துப் பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் கூட்டுதொழில் முயற்சிகளை தாபிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக அனுசரணை தெரிவித்துள்ள 24 முதலீட்டாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 36 பிரேரிப்புகளிலிருந்து வெற்றிகரமான 31 பிரேரிப்புகளை ஏற்றுக் கொள்வதற்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சு குழு சிபாரிசு செய்துள்ளது. இதற்கமைவாக, இந்த விடயம் சம்பந்தமாக நியமனம் செய்யப்பட்ட திறைசேரி செயலாளரின் தலைமையிலான உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசுகளுக்கு உட்பட்டு, வெற்றிகரமான பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களுடன் அரசாங்க - தனியார் அடிப்படையில் கூட்டுத் தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.