2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிலாபம் பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிருமாணித்தல் - இலகுவாக பெறக்கூடிய உயர் தரம் வாய்ந்த நோயாளர் சேவையொன்றை வழங்குவதன் மூலம் திடீர் விபத்துக்கள் காரணமாக நிகழும் மரணங்கள் மற்றும் அங்கவீனமுறல் என்பவற்றை தவிர்க்கும் நோக்கில் சிலாபம் பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவொன்றை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை நிருமாணிப்பதற்கு பொருத்தமான ஒப்பந்தக்காரரொருவரை தெரிவு செய்யும் பொருட்டு தேசிய ரீதியில் போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, ஒன்பது கேள்விதாரர்கள் இதற்காக முன்வந்துள்ளார்கள். இந்தக் கேள்விகளை மதிப்பிட்ட தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்துள்ள M/s. AMSK Construction (Pvt) Ltd நிறுவனத்துக்கு 501.2 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |