2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் லெபனானுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள உத்தேச தொழிலாளர்துறை தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - இலங்கை புலம்பெயர் தொழில் துறையாளர்கள் கணிசமான அளவினர் லெபனானில் சேவையாற்றுவதோடு, 2017 ஆம் ஆணடில் மாத்திரம் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் 1,593 பேர்கள் லெபனானில் தொழில் செய்வதற்காக சென்றுள்ளனர். அவர்களில் சுமார் 79 சதவீதமானோர் வீட்டு சேவை தொழிலுக்காக சென்றுள்ளனர். லெபனானில் சேவையாற்றும் இலங்கை தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நலனோம்பலை நோக்கமாகக் கொண்டும் இலங்கை்கும் லெபனானுக்கும் இடையில் தொழிலாளர்துறை தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு இரு நாடுகளுக்குமிடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் லெபனானில் தொழில்புரிவதற்காக இலங்கை தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வௌிப்படைத் தன்மை மற்றும் குறைந்த செலவிலான வழிமுறையொன்றை நடைமுறைப்படுத்துதல், இந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சேவைச் சூழலொன்றை உருவாக்குதல் போன்ற சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கமைவாக உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையை இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடும் பொருட்டு நீதி அமைச்சரும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சருமான தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |