• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தை அமுல்படுத்தும் பொறிமுறையை பலப்படுத்துதல்
- இலங்கை 1991 ஆம் ஆண்டில் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் கைச்சாத்திடப்பட்டு செயல்வலுவாக்கம் அளிக்கப்பட்டதோடு, அதற்கமைவாக சிறுவர் உரிமைகளை உச்ச அளவில் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது. இந்த சமவாயத்தின் கீழான பொறுப்புகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதோடு, சிறுவர் நன்னடத்தை, பாதுகாவல் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, சிறுவர் செயலகம் போன்ற நிறுவனங்கள் உட்பட பிரதேச செயலகங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் ஊடாக இந்த பணிகளை செயற்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சமவாயத்தின் 40 ஆம் பிரிவின் கீழ் பின்னூட்டல் மற்றும் அறிக்கையிடல் செயற்பாட்டிற்கு தேசிய மட்ட, மாவட்ட மட்ட, பிரதேச மட்ட செயற்பாட்டுக் குழுக்களைத் தாபிப்பதற்கு 2000 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய தேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த செயற்பாட்டு குழுக்களின் கட்டமைப்பையும் பணிகளையும் விரிவுபடுத்தும் பொருட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.