• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம் - அறுவக்காலுவில் நகர திண்மக் கழிவுகளை இறுதியாக அகற்றும் வசதிகளை தாபித்தல்
- மீதொட்டமுள்ள திறந்த கழிவு இடும் பிரதேசத்தில் திடீரென நிகழ்ந்த சரிவு காரணமாக எழுந்த நிலைமையினுள் கொழும்பு மற்றும் அதற்கு அண்மித்த பிரதேசங்களில் திண்மக் கழிவுகள் இடுவது பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த நிலைமையினுள் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள புத்தளம் - அறுவக்காலு பிரதேசத்தில் துப்பரவேற்பாட்டு நிரப்பும் நிலமொன்றைத் தாபிக்கும் கருத்திட்ட நடைமுறைப்படுத்துகைகை துரிதப்படுத்த வேண்டியுள்ளது.

இதற்கமைவாக, இந்த திண்மக் கழிவு முகாமைத்துவ கருத்திட்டத்திற்கு உரியதான கழிவு இடமாற்றல் நிலையம், துப்பரவேற்பாட்டு நில நிரப்பல், புகையிரதப் பாதை இணைப்பு ஆகிய பணிகளை துரிதமாக செய்வதற்கும் இங்கு கழிவுகள் இடப்படும் பணிகளை 2020 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிப்பதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.