• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிளிநொச்சி, இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் மாணவர்கள் சார்பில் விடுதியொன்றை நிர்மாணித்தல்
- தேசிய பயிலுநர், தொழினுட்ப பயிற்சி அதிகாரசபையின் கீழ் இயங்கும் கிளிநொச்சியிலுள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது சுமார் 200 மாணவர்கள் இதில் NVQ 4,5 மற்றும் 6 ஆம் மட்டங்களில் பயிற்சிப் பாடநெறிகளைக் கற்கின்றனர். அதன் தற்போதைய மாணவர்களின் எண்ணிக்கையில் சுமார் 57 சதவீதமானோர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வௌியே அமைந்துள்ள மாவட்டங்களில் வசிப்பவர்களாவர். இந்த பயிற்சி நிறுவனத்தில் தற்போதுள்ள விடுதி வசதி போதுமாவது சுமார் 144 மாணவர்களுக்காகும். இந்த ஆண்டில் மேலும் சுமார் 400 மாணவர்களை இங்கு பயிற்சி பாடநெறிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளமையினால் குறித்த விடுதி வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.

இதற்கமைவாக, மேலும் 400 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கக்கூடிய விதத்தில் கிளிநொச்சி, இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்திற்கு புதிய விடுதி கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.