2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சமூக புத்தாக்க ஆய்வுகூடமொன்றைத் தாபித்தல் - அரசாங்க கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அவற்றின் வெற்றி சம்பந்தமாக பரிசீலனை செய்யும் வழிமுறையொன்றாக சமூக புத்தாக்க ஆய்வுகூடமொன்றைத் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, முனைப்புடனான கொள்கைகளை வடிவமைப்பதற்கும் அதேபோன்று கொள்கைகளின் நிலையான தன்மையூடாக பயனுள்ள அரசாங்க சேவையொன்றை வழங்குவதை குறியிலக்காகக் கொண்டு உத்தேச சமூக புத்தாக்க ஆய்வுகூடத்தை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் உதவியின் கீழ் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சில் தாபித்து முன்னோடிக் கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |