• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீளச் செறிவூட்டக்கூடிய மின்கலங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு இலங்கை காரீயத்தை விருத்தி செய்தல்
- இலங்கை மிக உயர் தரம் வாய்ந்த காரிய உற்பத்தி செய்யும் நாடொன்றாக இருந்தபோதிலும், அவற்றுக்கு பெறுமதி சேர்க்காது மூலப்பொருளாதாக ஏற்றுமதி செய்வதன் காரணமாக இதன் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் வருமானம் குறைந்த மட்டத்திலுள்ளது. ஆதலால், கூடிய வருமானமொன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இயற்கை காரியத்தை விருத்தி செய்து, பெறுமதிசேர்க்கப்பட்ட உற்பத்தியொன்றாக ஏற்றுமதியின்பால் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, மீளச் செறிவூட்டக்கூடிய மின்கலங்களை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய விதத்தில் பொருத்தமான நவீனமயப் படுத்தலுக்கு உட்படுத்துவதன் மூலம் உள்நாட்டு இயற்கை காரியத்தை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சி கருத்திட்டமொன்றை தேசிய ஆரம்ப கல்வி நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.