• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்ட தொழில் அலுவலக கட்டடத் தொகுதியை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றைப் பெற்றுக் கொள்ளல்
- தொழில் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இரத்தினபுரி மற்றும் பதுளை வலயங்களுக்குரிய தொழில் அலுவலகங்கள், மாவட்ட தொழில் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட தொழிற்சாலை பரிசோதனை பொறியியலாளர் அலுவலகம் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட கட்டடங்களில் தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களி்ல் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக நாளாந்தம் பொதுமக்கள் பாரிய எண்ணிக்கையில் வருகை தருவதோடு, அவர்களுக்கு போதுமான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் இந்த அலுவலகங்களின் பணியாட்டொகுதியினருக்குத் தேவையான இடவசதிகளை வழங்குவதற்குமாக இந்த அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடங்களை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்ட தொழில் அலுவலக கட்டடத் தொகுதியை நிருமாணிப்பதற்குத் தேவையான காணித் துண்டொன்றைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சர் டபிள்யு.டீ.ஜே. செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.