• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சைகை மொழி தொடர்பான வரைவுச் சட்டமூலம்
- இலங்கையில் வசிக்கும் கேட்டல் குறைபாடுடைய சனத்தொகையினர் 389,677 என அறிக்கையிடப்பட்டுள்ளது. அங்கவீனம் தொடர்பான தேசிய கொள்கைக்கேற்ப, தீவிர கேட்டல் குறைபாடுடைய ஆட்களின் தொடர்பாடல் மொழியாக சைகை மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மொழியொன்றாக சைகை மொழியின் உருவாக்கத்துடன், கேட்டல் குறைபாடுடைய ஆட்களின் கல்வி கற்பதற்கான உரிமையை இது உறுதிப் படுத்துவதுடன் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளை பாராபட்சமின்றி அவர்கள் அடைந்து கொள்வதற்கு வழிசமைக்கின்றது. கேட்டல் குறைபாடுடைய ஆட்களுக்கு இவ்விதத்தில் சமவாய்ப்புக்களை வழங்குதலானது அவர்களின் சுயமதிப்பினை அதிகரிக்கின்றது.

அதற்கிணங்க இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியொன்றாக சைகை மொழியினை உருவாக்கும் சட்ட ஏற்பாட்டினை ஏற்படுத்தும் குறிக்கோளுடன், சைகை மொழி தொடர்பான பிரேரிக்கப்பட்ட வரைவுச் சட்டமூலத்தை வரைவதற்காக சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.