2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் விமான சேவைகள் இணக்கப்பேச்சுக்கள் தொடர்பான 10 ஆவது மாநாடு - சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்படும் வருடாந்த சர்வதேச சிவில் விமான சேவைகள் இணக்கப்பேச்சு மாநாடானது நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து உரிமைகளுக்காக இரு தரப்பு இணக்கப் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு உலக விமான சேவைகளுக்கான சந்தர்ப்பத்தினை வழங்குகின்றது. 10 ஆவது தடவையாக நடாத்தப்படும் கூறப்பட்ட மாநாட்டினை 2017 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 04 ஆம் திகதியிலிருந்து 08 ஆம் திகதிவரை இலங்கையில் ஏற்பாடு செய்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றன. அதற்கிணங்க, இந்நிகழ்வை இலங்கையில் நடாத்துவதற்காக சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|