• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய பாலங்களை நிர்மாணித்தல்
- தேசியமட்ட அபிவிருத்தி கருத்திட்ட செயற்பாடுகளின் உச்சபட்ச நன்மைகளை நகரத்திற்கு மாத்திரமன்றி பின்தங்கிய கிராமங்களுக்கும் வழங்கும் பொருட்டு நாட்டிற்குள் இணைப்பு மேம்பாட்டிற்காக உயர் முன்னுரிமை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டின் கீழ், கிராமப்புற பிரதேசங்களில் கிட்டத்தட்ட 3,500 தொடக்கம் 4,000 வரையான பாலங்களை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் பால நிர்மாணம் தொடர்பான 02 கருத்திட்டங்கள் ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்தின் நிதி உதவியுடன் தற்போது செய்முறையிலுள்ளன.

அதேவேளை, கிராமப்புறங்களில் பாலங்களை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு ஹங்கேரி மற்றும் பெல்ஜிய அரசாங்கங்கள் முன்வந்துள்ளன. அதற்கிணங்க, கூறப்பட்ட அரசாங்கங்களின் நிதி உதவியுடன் கிராமப்புறங்களில் பாலங்களை நிர்மாணித்தல் சார்பில் 02 கருத்திட்டங்களை அமுலாக்குவதற்கான பிரேரிப்புக்களை கோருவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிகாரம் அளிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.