• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடுக்குடா நெய்யறி உபமின் நிலையத்தை நிருமாணித்தலும் மன்னார் நெய்யறி உபமின் நிலையத்தை மேம்படுத்துதலும்
- இலங்கை மின்சாரசபைக்குச் சொந்தமான அனுப்பீட்டு வலையமைப்பை பலப்படுத்து வதற்காக செயற்படுத்தப்படும் பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் மின்சக்தி வினைத்திறன் மேம்பாடு தொடர்பான முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடுக்குடா நெய்யறி உபமின் நிலையத்தை நிருமாணிப்பதற்கும் மன்னார் நெய்யறி உபமின் நிலையத்தை மேம்படுத்துவதற்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2,697.96 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Seimens Ltd., India நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.