• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பெற்றுக் கொள்வதற்கான மின்சார செலுத்துகை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் 4 நெய்யறி மின் நிலையங்களின் நிருமாணிப்பு
- எதிர்காலத்தில் பிரதான வலையமைப்புடன் இணைக்கப்படவுள்ள சிறிய நீர்மின் நிலையங்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிரதான அனுப்பீட்டு முறைமையுடன் சேர்க்கும் பொருட்டு நாவலபிட்டிய, ராகல், வேவெல்வத்த, மாலிபொட ஆகிய பிரதேசங்களில் 04 நெய்யறி மின் நிலையங்களையும் அதற்கான அனுப்பீட்டு கம்பி வழிகளையும் நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் சிவில் வேலைகள், நிருமாணப் பணிகள், உரிய உபகரணங்களை இணைத்தல் மற்றும் இயக்குதல் தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 1,233 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Ceylex Engineering (Pvt) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.