• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை மாவட்ட பொது வைத்தியசாலையில் பக்கவாத பிரிவிற்காக கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
- பக்கவாதம் முதியோரின் இயலாமைக்கு பிரதான காரணமாவதோடு, இது நாட்டின் வைத்தியசாலை முறைமையின் பதிவு செய்யப்படும் மரணங்களில் நான்காவது பிரதான காரணியாகும். உரிய சிகிச்சை மற்றும் புனரமைப்பு வசதிகள் மூலம் பக்கவாத நோயை சுகப்படுத்தலாம். இருந்த போதிலும் உரிய வசதிகளுடன் விருத்தி செய்யப்பட்ட பக்கவாத சிகிச்சைப் பிரிவொன்று தற்போது இறாகமை புனரமைப்பு வைத்தியசாலையில் மாத்திரமுள்ளது.

ஆதலால், பக்கவாத நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சை வசதிகளை விருத்தி செய்யும் நோக்கில் நரம்பியல், மூட்டுவாதம், இயன்முறை மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு போன்ற பிரிவுகள் அடங்கலாக பொலன்நறுவை மாவட்ட பொது வைத்தியசாலையில் பக்கவாத பிரிவை அபிவிருத்தி செய்வதற்கு கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தக் கட்டடத் தொகுதியின் நிருமாணிப்புக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 348 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Link Engineering (Pvt) Ltd., நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.