2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இருதய - மார்பு சிகிச்சைப் பிரிவை நிருமாணித்தல் (கட்டம் II) - சிறுவர் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலையான ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் ஊடாக வழங்கப்படும் நோயாளர் சிகிச்சை சேவைகளை மேலும் விருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கமைவாக உயர்தரம் மிக்க இருதய மார்பு சிகிச்சை சேவை வழங்குதல் உட்பட, மருத்துவ பரிசோதனைகளுக்கான வசதிகளை விருத்தி செய்வதற்குமாக இந்த வைத்தியசாலையில் இருதய மார்பு சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்டத்தின் நிருமாணிப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை பிரிவை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 159.94 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Electro Metal Pressing (Pvt) Ltd., நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |