• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப் பிரிவை தாபித்தல்
- காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் மாவட்டமொன்றாக அம்பாந்தோட்டை மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், ஆரம்ப கட்டத்திலேயே இந்த நீண்டகால சிறுநீரக நோயை கண்டறிவதற்கும் இதனால் நிகழும் மரணங்களை தடுப்பதற்குமாக குருதி சுத்திகரிப்பு, காவறை, சிகிச்சை மற்றும் இரசாயனகூட வசதிகளுடன் கூடிய சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவொன்றை அம்பாந்தோட்டை பொது வைத்தியாசலையில் நிருமாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைவாக, இந்த சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவை நிருமாணிப்பத்றகான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 210 மில்லியன் ரூபாவுக்கு M/s. RN Constructions (Pvt) Ltd., நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.