2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி - விளையாட்டை கிராமத்துக்கு கொண்டு செல்வதன் மூலம் இளைய தலைமுறையினரின் விளையாட்டு ஆற்றலை விருத்தி செய்து அவர்களை சருவதேச மட்டத்திற்கு கொண்டு செல்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்காக நாட்டின் சகல மாகாணங்களையும் தழுவும் விதத்தில் "மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதிகளை" நிருமாணிப்பதற்கும் இந்த மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதிகள் தாபிக்கப்படும் மாவட்டங்கள் தவிர மீதி 16 மாவட்டங்களையும் தழுவும் விதத்தில் "மாவட்ட விளையாட்டு கட்டடத் தொகுதிகளை" நிருமாணிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதோடு, இதில் பெரும்பகுதி நிருமாணிப்பு பணிகள் ஏற்கனவே முடிவுள்ளது. அத்துடன் இந்த மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதிகளில் தங்குமிட வசதிகளை வழங்கவேண்டியுள்ளதோடு, மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டு கட்டடத் தொகுதிகளுக்கு தொலைவில் அமைந்துள்ள பிரதேசங்களில் வசிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் வழங்க வேண்டியுள்ளது. இதற்கமைவாக, பொலன்நறுவை, கிளிநொச்சி, குருநாகல், பதுளை, திகன, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலுள்ள 08 மாகாண விளையாட்டுத் தொகுதிகளுக்கு அண்மையில் ஒரே தடவையில் விளையாட்டு வீரர்கள் 100 பேர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கக்கூடிய 08 விடுதிகளை 1,087 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிருமாணிப்பதற்கு மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டு தொகுதிகளுக்கு தூர இடங்களில் அமைந்துள்ள பிரதேசங்களை இனங்கண்டு, இந்தப் பிரதேசங்களில் அங்க சம்பூரமான 06 உள்ளக விளையாட்டு அரங்குகளை 1,050 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிருமாணிப்பதற்குமாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |