• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திரவ இயற்கை எரிவாயு பயன்படுத்துவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தல் மற்றும் அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் தொடர்பான அரசாங்க கொள்கையைத் தீர்மானித்தல்
- இலங்கையில் வலுசக்தி பாதுகாப்பினை உறுதி செய்தல், மின்சார துறைசார்பில் பயன்படுத்தப்படும் எரிபொருளை பல்வகைப்படுத்துதல், மின்சார உற்பத்தி செலவுகளைக் குறைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு திரவ இயற்கை எரிவாயு பயன்படுத்துவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தல் மற்றும் அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் தொடர்பான அரசாங்க கொள்கையைத் தீர்மானிப்பது சம்பந்தமாக ஆராயும் பொருட்டு விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று 2017-07-18 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது.

இந்த அமைச்சரவை உபகுழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இலங்கையில் மின்சார உற்பத்திக்கு எரிபொருளொன்றாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதனை கொள்கையொன்றாக அங்கீகரிப்பதற்கும் 2019 ஆம் ஆண்டளவில் சுமார் 1000 மொகாவோட் ஆற்றல் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் சார்பில் இயற்கை எரிவாய்வினை பயன்படுத்துவதற்கும் நாட்டிற்கு திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வதற்கும் ஏற்றி இறக்குவதற்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக மேம்படுத்துவதற்காகவும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.