• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க ஊழியர்கள் சார்பில் இறாகம பிரதேசத்தில் நடுத்தர வருமான வீடமைப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- நடுத்தர வருமானம் பெறும் குழுக்களுக்கத் தேவையான 500,000 வீடுகளை எதிர்வரும் ஐந்து வருட காலத்திற்குள் நிருமாணித்தல் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நடுத்தர வருமான வீடமைப்பு அபிவிருத்தி நிழக்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். இலங்கையில் நடுத்தர வருமானம் பெறுபவர்களில் கூடுதலானோர் அரசாங்கதுறை மற்றும் பகுதி அரசாங்க துறை ஊழியர்களென இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க துறையிலுள்ள ஊழியர்களுக்கு ஏற்கக்கூடிய விலையில் வீடுகளை வழங்கும் நோக்கில் காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான இறாகம பிரதேசத்திலுள்ள மூன்று ஏக்கர் காணித்துண்டொன்றை அபிவிருத்தி செய்து 400 மாடி வீடுகளைக் கொண்ட வீடமைப்புக் கருத்திட்டமொன்றை மேற்போந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.