• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரவளை நீர்வழங்கல் திட்டத்தை விருத்தி செய்தல்
- உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் சுரங்க நிருமாணிப்பின் போது ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக தங்களுடைய கிணறுகளில் நீர் குறைவடைந்து அத்துடன் வற்றியுள்ளதன் காரணமாக பண்டாரவளை மற்றும் எல்ல பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதற்கு முன்னர் தங்களுடைய கிணறுகளில் நீரைப் பாவித்த குடும்பங்கள் குழாய் நீர் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுக்கும் போக்கு அதிகரித்துள்ளதோடு, இதற்கு ஒருங்கிணைவாக பண்டாரவளை நீர்வழங்கல் திட்டம் அதன் இயலளவை அதிகரித்து மேம்படுத்த வேண்டியுள்ளது.

இதற்கமைவாக, பாதிக்கப்பட்டுள்ள எகொடகம, வெஹெரகலதென்ன, உடபேருவ, கினிகம, ஹீலோய ஆகிய பிரதேசங்களை தழுவும் விதத்தில் சுமார் 1,000 குழாய்நீர் இணைப்புகளை புதிதாக வழங்கக்கூடிய விதத்தில் பண்டாரவளை நீர்வழங்கல் திட்டத்தின் செயலளவை நாளொன்றுக்கு 2,000 கனமீற்றர் மேலதிக அளவாக அதிகரிக்கும் பொருட்டிலான கருத்திட்டமொன்றை 225 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.