• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒஸ்ரியாவின் இலகு கடன் திட்டத்தின் கீழ் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு 100 அம்பியூலன்ஸ் வண்டிகளை பெற்றுக் கொள்ளல்
- அத்தியாவசிய சுகாதார சேவை வசதிகள் கொண்ட கிட்டிய வைத்தியசாலைக்கு வினைத்திறனுடனும் பாதுகாப்பாகவும் நோயாளிகளை கொண்டு செல்லும் தரம்மிக்க சுகாதார உபசரிப்பு சேவையொன்றை வழங்குவது மிக முக்கியமானதாகும். இதற்கமைவாக, தேவையான உயிர்காப்பு கருவிகளுடன் கூடிய 100 அம்பியூலன்ஸ்களை தேர்தெடுக்கப்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வழங்கும் கருத்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்கு 9.8 மில்லியன் யூரோக்களைக் கொண்ட சலுகை கடன்தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு Raiffeisen Bank of Austria வங்கியுடன் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.