• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடமாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல்
- 30 வருடங்களுக்கு மேலாக நிலவிய மோதல் நிலைமைகளின் காரணமாக வட மாகாணத்தில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றதோடு, இதில் சிங்கள மொழிமூல ஆசிரியர் பற்றாக்குறை பிரதான பிரச்சினையொன்றாகும். இதற்கு மாற்று வழியாக மோதல் நிலைமை நிலவிய காலம் முதல் வட மாகாண சிங்கள மொழிமூல பாடசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றிய ஆசிரியர்களிலிருந்து ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்புக்கு அமைவாக அடிப்படை கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்களை ஆசிரியர் சேவையின் நிரந்தர பணியாட்டொகுதிக்கு உள்ளீர்க்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.