2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளகளுக்கு நிவாரணங்களை வழங்குதல் - உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது சம்பந்தமாக பரிசீலனை செய்யும் பொருட்டு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசின் பிரகாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்கும் நோக்கில் பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: * பாதிக்கப்பட்ட வீடுகளிலிருந்து தற்போது அப்புறப்படுத்தியுள்ள குடும்பங்களுக்கு, இந்த குடும்பங்களை மாற்று காணிகளில் மீளக்குடியமர்த்தும் வரை, ஆறு (06) மாதங்கள் என்னும் உச்ச காலப்பகுதிக்கு உட்பட்டு, அரசாங்க விலைமதிப்பீட்டாளரின் சிபாரிசுக்கு அமைவாக 10,000/- ரூபாவிலிருந்து 25,000/- ரூபா வரை மாதாந்த வீட்டு வாடகை கொடுப்பனவொன்றை வழங்குதல். * பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் உலர்உணவு பொதியினை மேலும் ஆறு (06) மாத காலத்திற்கு வழங்குவதற்கும். |