2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அதிவணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித்த தேரோ அவர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியினை நிருமாணித்தல் - நல்லாட்சியினை அடிப்படையாகக் கொண்ட சனநாயகம், மத ஒற்றுமை, தேசிய நல்லிணக்கம் என்பவற்றை நாட்டில் நிலைநாட்டுவதற்கு அதிவணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித்த தேரோ அவர்களிால் மேற்கொள்ளப்பட்ட உன்னத பணியினை நினைவுகூரும் முகமாக "அதிவணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித்த தேரோ அவர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியினை" நிருமாணிப்பதற்கும் இதற்கான நிதிப் பங்களிப்பினை அரசாங்கத்தினால் வழங்குவதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |