• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேருவளை, அளுத்கமை ஆகிய பிரதேசங்களில் 2014‑06‑15 ஆம் 2014‑06‑16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற துரதிஷ்டம் மிக்க சம்பவம் காரணமாக மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடு வழங்குதல்
- பேருவளை, அளுத்கமை ஆகிய பிரதேசங்களில் 2014‑06‑15 ஆம் 2014‑06‑16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கவலைக்கிடமான சம்பவத்தின் காரணமாக மூன்று பேர்கள் மரணமடைந்தும் 12 பேர்கள் காயமடைந்தும் உள்ளனர். கருணை அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த சம்பவத்தில் மரணித்த ஒருவருக்கு 2 மில்லியன் ரூபா வீதம் அவர்களுடைய குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கும் இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவருக்கு ஆகக்கூடுதலாக 500,000/- ரூபா வீதமும் நட்டஈடு வழங்குவதற்கும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.