2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை பாராளுமன்றத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா - 1947 ஒக்றோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நாட்டின் பாராளுமன்ற முறைக்கு 70 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு "இலங்கையில் 70 ஆண்டுகள் கொண்ட பாராளுமன்ற சனநாயகம்" என்பதனை கொண்டாடுவதற்கு சார்க் நாடுகளின் மாண்புமிகு சபாநாயகர்களின் மாநாடொன்று 2017 ஒக்றோபர் மாதத்தில் நடாத்தப்படவுள்ளதோடு, இலங்கை பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை விமர்சையாக ஆரம்பிப்பதற்கும் ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஒருங்கிணைவாக 1947 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கை பாராளுமன்றம் சார்ந்த வரலாற்று தகவல்கள், தரவுகள் மற்றும் புகைப்படங்கள் அடங்கலாக நினைவு மலரொன்றை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தயாரிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, இதற்குத் தேவையான 3 மில்லியன் ரூபா நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |