2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீதிமன்ற தன்னியக்க கருத்திட்டம் - நடவடிக்கைகளின் போது ஏற்படும் காலதாமதம் நாட்டின் நீதிமன்ற துறையில் நிலவும் பிரதான பிரச்சினையாக மாறியுள்ளது. வழக்கு சட்ட மறுசீரமைப்பு, நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி, நீதிமன்ற தன்னியக்கம் மற்றும் ஆற்றல் அபிவிருத்தி போன்ற நான்கு திறமுறைகளின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இவற்றுள் "நீதிமன்ற தன்னியக்க" கருத்திட்டத்தின் கீழ் வழக்குகளைத் தொடுத்தல் மற்றும் வழக்கு கோவைகளின் முகாமைத்துவம் என்பவற்றின் வினைத்திறனுக்குத் தேவையான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை நீதிமன்றங்களில் தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, 2016 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் இதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் இதற்காக தொழினுட்ப மற்றும் நிதி ஆற்றலுள்ள நிறுவனங்களிடமிருந்து பிரேரிப்புகளைக் கோருவதற்கு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |