• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழுள்ள 600 குடும்பங்களுக்காக வீடுகளை நிருமாணித்தல்
- 216,197 குடும்பங்கள் வீடு ஒன்றையோ அல்லது தமக்குச் சொந்தமான வீடு ஒன்றை கட்டுவதற்கான நிலமொன்றையோ கொண்டிருக்கவில்லையென்பதை 2016 ஆம் ஆண்டின் வீட்டுத் தேவைகள் பற்றிய கணக்கெடுப்பொன்று வௌிப்படுத்தியுள்ளது. இக்குடும்பங்களுக்கான வீட்டு வசதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று அரசாங்கத்தினால் தற்போது வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழுள்ள 600 குடும்பங்கள் சார்பில் வீடுகளை நிருமாணிப்பதற்கான நிதி உதவியினை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

அதற்கிணங்க, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 300 மில்லியன் ரூபா தொகையினைப் பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டும் 'யாவருக்கும் புகலிடம் கிராம சக்தி மாதிரி கிராம கருத்திட்டத்தின்' கீழ் இலங்கையில் 25 மாவட்டங்களை தழுவி வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களை இலக்காகக்கொண்டு 600 வீடுகளை நிருமாணிப்பதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.