2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வௌ்ளவத்தை கால்வாய் ஒதுக்கத்திற்குள் பாதுகாப்பற்ற முறையில் அமைந்துள்ள கட்டடங்களை இடம் நகர்த்துதல் - வௌ்ளவத்தை கால்வாய் ஒதுக்கத்திற்குள் நிருமாணிக்கப்பட்ட அங்கீகரிக் கப்படாத கட்டடமொன்று இடிந்துவிழுந்ததன் பின்னர், இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட களப் பரிசோதனையின் போது, ஶ்ரீ சுகத்த விஹாரை மற்றும் அதனுடன் இணைந்த சிறுவர் இல்லம் என்பன கால்வாய் ஒதுக்கத்திற்கு மிக நெருக்கமாக பாதுகாப்பற்ற முறையில் நிருமாணிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், ஶ்ரீ சுகத்த விஹாரை மற்றும் சிறுவர் இல்லம் என்பவற்றை மீள் நிருமாணிக்கும் பொருட்டு தெஹிவளை, அத்திடிய பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணித் துண்டொன்றை விஹாரைக்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |